சிறை தண்டனை: ஐகோர்ட்டில் செங்கோட்டையன் அப்பீல்
சென்னை:
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையன் தனக்கு தனி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்காக பஸ் பாடிக்கட்டுமானப் பொருட்கள் வாங்கியது, பயணச் சீட்டுகள் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ 75.42 வரை ஊழல் செய்ததற்காக 5 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தனிநீதிபதி தார்வேஷ் இந்த தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கினார். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை 3 வருடத்திற்கு அதிகமானதால் அவர்கள் உடனடியாக வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தற்போது செங்கோட்டையன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கும் படி வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications