தேயிலை இறக்குமதிக்கு தடை கோரி போராட்டம்
கோவை:
தேயிலை இறக்குமதியை தடை செய்ய வேண்டும், இல்லையென்றால், இறக்குமதிவரியை 150 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனக் கோரி தேயிலைத் தோட்டஅதிபர்கள் வால்பாறையில் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைஎஸ்டேட்டுகள் நிறைந்துள்ளன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இங்குபணியாற்றுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்துபசுந்தேயிலை உற்பத்தி செய்து வந்த நீலகிரி விவசாயிகள், இதனால் கடும்பாதிப்படைந்தனர். இந்தப் போராட்டம் மானியம் அளிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.
இப்போது வால்பாறையில் தேயிலைத் தாட்ட அதிபர்கள் போராட்டத்தைதுவங்கியுள்ளனர்.
சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இலங்கை, இந்தோனேஷியா, கென்யாபோன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை மிக குறைந்த விலையில்இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை தற்போது இந்தியாவில் குறைந்தவிலைக்கு கிடைக்கிறது. இந்த தேயிலையை வாங்கி, அதனுடன் கலந்து ஏற்றுமதிசெய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் தேயிலைத் தரம்குறைந்து ஏற்றுமதி பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வால்பாறை தேயிலை எஸ்டேட்டுகளில், தேயிலை உற்பத்தி செலவு கிலோ ஒன்றிற்குரூ. 60 வரை ஏற்படுகிறது. ஆனால், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளில்தொழிலாளர்களுக்கு அரசே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விடுவதால்அங்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் தேயிலைகளுக்கு 40 சதவீதம் இறக்குமதிவரி விதிக்கப்பட்டாலும்., கிலோ ஒன்றின் விலை ரூ. 28 முதல் 45 வரை தான்இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செலவே ரூ. 60 ஆகிறது. எனவேஇறக்குமதி தேயிலைக்கு 150 சதவீதம் இறக்குமதி விதித்தால் மட்டுமே, தேயிலைதொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்க முடியும்.
மேலும், தேயிலைத் தொழில் நலிவடைந்து வருவதால், தோட்டத் தொழிலளர்களின்கூலியை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். கூலித்தொழிலாளர்களின் சம்பளக் குறைப்பு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது
தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தைப் போக்க வேறு வழி எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை என தோட்டத் தொழிலதிபர்கள் தெரிவித்தனர். வால்பாறையில் நடந்தகடையடைப்பு போராட்டம் அடையாள போராட்டம். இது தொடராமல் பாதுகாக்கஅரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications