தடா கைதிகள் வழக்கு: தனி நீதிபதி பதவி ஏற்றார்
மைசூர்:
மைசூர் சிறையில் இருக்கும் தடா கைதிகள் வழக்கை விசாரிக்க தனி நீதிபதியாக மைசூர் செசன்சு நீதிபதியாகஇருந்த டி. கிருஷ்ணா வியாழக்கிழமை பதவி ஏற்றார்.
சந்தன வீரப்பனுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 121 பேர் தடா சட்டத்தின் கீழ் கைதாகிமைசூர் சிறையில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற வீரப்பன் இந்த தடா கைதிகளை விடுவிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்திருந்தான். ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தடா வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதியை நியமிக்கஅனுமதி தருமாறு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடராம ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
மைசூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதியாக இருந்த டி. கிருஷ்ணா என்பவைர தடா கைதிகளை விசாரிக்கும்தனி நீதிமன்றத்துக்கு நீதிபதியாக உயர் நீதிமன்றம் நியமித்தது. இவர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தடா வழக்குகளை இதுவரை விசாரித்து வந்த மைசூர் செசன்சு நீதிபதி ராஜேந்திர பிரசாத்திடமிருந்துபொறுப்பேற்றுக் கொண்டார்.
தடா கைதிகள் மீதான முதல் வழக்கு ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது. தனி நீதிபதி பொறுப்பேற்றுள்ளதால்தடா கைதிகள் விசாரணை விரைவுபடுத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications