கண்ணன் நீக்கம் .. கண்டிக்கிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணனை அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஜனநாயகக் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனத்திலுள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதலைப்புலிகளுக்கும், அமைச்சர் தேனி.ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறிய காரணத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர்கண்ணனை, முதல்வர் சண்முகம் தனது அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளார். இது முதல்வர் சண்முகம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்என்பதையே காட்டுகிறது.
கண்ணன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், அவரை உடனடியாக பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.நாராயணசாமி சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியில்கோஷ்டிப் பூசல் உள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தெய்வநாயகம் மற்றும் அவரது தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications