For Daily Alerts
Just In
அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சாவு
மதுரை:
மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராம பஞ்சாயத்து தலைவர், மதுரையில் நடந்த சாலை விபத்தில் இறந்தார்.
திருவாதவூரைச் சேர்ந்தவர் முத்தையா அம்பலம் (55). அ.தி.மு.க வைச் சேர்ந்த இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார்.இவரும் இவரது மகன் மோகனும் (25), மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக பஸ், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்தையா அம்பலம்சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மகன் காயமடைந்தார். மோகன் ராஜாஜி அரசு மருத்தவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இருவரும் திருமணம் ஒன்றிற்கு சென்று விட்டு கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகபோலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, December 15, 2000, 5:30 [IST]