For Daily Alerts
Just In
ஈழவேந்தனுக்கு ஆதரவாக போராட்டம் .. நெடுமாறன் கைது
சென்னை:
ஈழவேந்தன் நாடு கடத்தலைக் கண்டித்து, பழ.நெடுமாறன் வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்காக வந்தார் நெடுமாறன்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே நெடுமாறனை போலீஸார் கைது செய்தனர். அவருடன் 117 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானஅனைவரும் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]