For Daily Alerts
Just In
கலைந்தது ஒரு கட்சி...
சென்னை:
தமிழக ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால் கட்சிகலைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராம் தியோ பண்டாரி இதுகுறித்து மாநிலதலைமை தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநிலகட்சியில் கோஷ்டிப் பூசல் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.
எனவே கட்சியைக் கலைக்க முடிவு செய்தோம். இனிமேல் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின்பெயரை அனுமதி இல்லாமல் யாரும் தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாது.
கட்சி கலைக்கப்பட்ட விவரம், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்சிவஞானசம்பந்தனுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]