For Daily Alerts
Just In
உலக செஸ்: இறுதிப் போட்டியில் ஆனந்த் - ஷிரோவ் மோதல்
டெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இறுதிச் சுற்றுக்குஇந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முன்னேறினார்.
அரையிறுதியின் நான்காவது சுற்று போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது.இந்தபோட்டியை டிரா செய்தாலே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில்ஆனந்த் விளையாடத் தொடங்கினார்.
இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்சுடன் இறுதி அரை இறுதிச் சுற்றில் மோதினார்.ஆட்டத்தின் 19வது மூவில் ஆடம்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்துஆட்டத்தின் 37வது மூவில் இரு ஆட்டக்காரர்களும் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளமுடிவு செய்ததால் போட்டி டிராவானது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவுடன் ஆனந்த் மோதுகிறார்.
Comments
Story first published: Tuesday, May 16, 2000, 5:30 [IST]