புலிகளுடன் நேரடிப் பேச்சு கிடையாது.. கதிர்காமர்
டெல்லி:
விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபடாது என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள கதிர்காமர், சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம்பேசியதாவது:
விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையின்றி பேச்சு நடத்த இலங்கை அரசு தயாராகஉள்ளது. பிரச்சினையின் ஆழம் குறித்து பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம்கொடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் நிபந்தனை ஏதும் விதிக்கக்கூடாது.
பேச்சுவார்த்தை எப்படி அமைய வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை.இருப்பினும் விடுதலைப் புலிகளுடன், இலங்கை அரசு நேரடியாகப் பேசாது.
பேச்சுவார்த்தை நடக்கும்போது, யாழ்ப்பாணத்தில் ராணுவ நடவடிக்கையைநிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வட பகுதிகளுக்கு பொருளாதார தடைஏதும் அந்த சமயத்தில் விதிக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே அரசுதெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இந்தியாவுக்கு இதில்எந்தப் பங்குமில்லை. இந்தியாவும் பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை. நார்வேதூதுக் குழுவினரும் கூட, விடுதலைப் புலிகளை, பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்கமுயற்சிப்பதாகவே கூறியுள்ளனர்.
இருப்பினும், இலங்கைப் பிரச்சினையில், இந்தியாவின் முக்கியத்துவம் மறுக்கமுடியாதது. இங்கு நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்தியாவுக்குத் தவறாமல்தெரிவித்து வருகிறோம். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இதுதொடர்பாக நல்லதொடர்பு இருந்து வருகிறது.
பல்வேறு காரணங்களால், டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பேச்சுவார்த்தைதுவங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.