காளிமுத்துவுக்கு விரைவில் "பைபாஸ் ஆபரஷேன்
சென்னை:
இருதய கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்துவுக்கு ஒரு வாரத்தில் பைபாஸ்அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மாரடைப்பு காரணமாக கடந்த 11-ம் தேதியன்று அ.தி.மு.க. அவைத்தலைவர்காளிமுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அவருக்குதீவிர கண்காணிப்பு பகுதியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை அவருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை நடத்தப்பட்டது இதில் அவரதுஇதயத்திற்கு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இவைசரிசெய்யப்பட வேண்டுமானால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
காளிமுத்துவுக்கு குடல்புண் நோய் (அல்சர்)இருப்பதால் முதலில் அதற்கு சிகிச்சைசெய்த பின் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காளிமுத்துவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில்,காளிமுத்துவுக்கு இருதயத்தில் இருந்து வந்த ரத்தக் சசிவு நின்று விட்டது. ஆனாலும்அவர் இன்னும் அபாய கட்டத்ததை தாண்டவில்லை. அவருக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடிக்கடி மருத்துவமனைக்குதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காளிமுத்து உடல்நிலை குறித்து விசாரித்துவருகிறார்.












Click it and Unblock the Notifications