தபால் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் எனமத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம்தெரிவித்துள்ளன.

ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ, சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப்ஆகிய தொழிற்சங்கங்கள் அடங்கிய தபால் ஊழியர் ஆதரவுக் குழு இதுகுறித்துவெளியிட்ட அறிக்கை:

வேலைநிறுத்தம் செய்யப் போவதாக 14 நாட்களுக்கு முன்பே தபால் துறை ஊழியர்கள்நோட்டீஸ் கொடுத்து விட்டனர். தொழிற்சாலை சட்டப்படி அவர்கள்செயல்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே,ஊழியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்க முடியாது என்று மத்திய அமைச்சர்கள்சிலர் அறிவிப்பு வெளியிட்டனர்.

வேலைநிறுத்தம் தொடங்கி 10 நாட்கள் கழித்து அதை சட்டவிரோதம் என்று அரசுசொல்வது கேலிக்குரியது. அவசர கால பணிச் சட்டத்தை பிரயோகிக்கப் போவதாகவும்அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த மிரட்டலுக்கு தொழிலாளர்கள் பயப்படமாட்டார்கள்.

சட்டவிரோதம் என்று அறிவித்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு, தபால் துறைஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பிரதமர் தலையிட்டுஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.

ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே டிசம்பர்18-ம் தேதி ஒரு நாள் முழுவதும் தர்ணா நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+