For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறைக்கு எதிராக தீப்பந்த ஊர்வலம்

By Staff
Google Oneindia Tamil News

குவஹாத்தி:

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் வன்முறையை எதிர்த்து 5,000 பேர் கலந்துகொண்ட தீப்பந்த ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடந்தது.

அசாமில் கடந்த இரண்டு மாதமாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 120 பேர்கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தி மொழி பேசும் பீஹார் மக்களும், வடக்குராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வாடி இனத்தவரும் தீவிரவாதிகளால்தாக்கப்பட்டு வருகிறார்கள்.

20 வருடமாக தனிநாடு கேட்டு போராட்டம் நடத்திவரும் உல்ஃபா தீவிரவாதிகளாலும்,போடோ லேன்ட் தேசிய ஜனநாயக முன்னணியினராலும் இதுவரை 10,000-க்கும்அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து தலைநகர் கவுஹாத்தியில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், தீவிரவாத்தை எதிர்த்து எழுதப்பட்டஅட்டைகளை ஏந்தி, தேசிய உணர்வூட்டும் பாடல்களை பாடிய வண்ணம் சென்றனர்.

ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த அசாம் கனரபரிஷத்தின் இளைஞர் அணியான அசோம்யுவா பரிஷத்தின் தலைவர் ஜகதீஷ் புயான் கூறியதாவது:

மக்கள் அனைவரும் வன்முறையை வெறுக்கிறார்கள் என்பதை தீவிரவாதிகளுக்குதெரிவிப்பதுதான் இந்த ஊர்வலத்தின் நோக்கம் என கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X