நெடுமாறனைக் கைது செய்த அதிகாரி இடமாற்றம்
சென்னை:
சென்னையில் நடந்த போராட்டத்தின்போது பழ. நெடுமாறனைக் கைது செய்த காவல்துறை அதிகாரி பி.சிவனாண்டி இடமாற்றம் செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை சென்னையில், பழ. நெடுமாறன் தலைமையில், தமிழ் ஈழ விடுதலைமுன்னணித் தலைவர் ஈழவேந்தன் நாடு கடத்தலைக் கண்டித்துப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டத்தின்போது நெடுமாறன் மற்றும் பிறர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
போலீஸ் அனுமதி மறுத்திருந்த இந்தப் போராட்டத்தை தடையை மீறி நெடுமாறன்நடத்தினார். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார்வலுக்கட்டாயமாக நெடுமாறன் மற்றும் பிறரை கைது செய்து வேனில் ஏற்றியதுவிடியோ மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், சிவனாண்டி, கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் போலீஸ்பிரிவின் கமாண்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண் நிருபர்களை தாக்கியதாகசிவனாண்டி மீது புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதே இதுகுறித்துமுதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications