புதுவை அரசியல் மாற்றம் தமிழகத்தில் எதிரொலிக்கும்
ஈரோடு:
புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம், தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் தமிழக பா.ஜ.,வின் செயற்குழுக் கூட்டம் மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட முடிவிற்கு பின்னர் நிருபர்களுக்குபொதுச் செயலர் இல. கணேசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதுவையில் தி.மு.க., பா.ம.க.,பா.ஜ., கண்ணன் ஆகியோர் ஓரணியில் உள்ளனர். இவர்களில் , தி.மு.க., பா.ம.க, கண்ணன் ஆகியோரிடையே யார்தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் தான் போட்டி நிலவுகிறது. புதுவை அரசியலுக்கும் தமிழக அரசியலுக்கும் பெரியதாக ஒன்றும் வித்தியாசம்இல்லை.
இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க தமையில் ஆட்சி அமைப்படைத் தான் பா.ஜ விரும்புகிறது. புதுவை பேரவையில் பா.ஜ.,வுக்கு பிரதிநிதித்துவம்இல்லை. அடுத்த தேர்தலில் நிச்சயம் இந்த பிரதிநிதித்துவம் உருவாகும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை புதுவையில் ஆட்சி அமைக்க பெரும்பங்கு வகிக்கக் கூடிய கட்சியாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையில், உள்ள கூட்டணிக் கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை சர்க்கஸ் மாஸ்டர் போல முதல்வர் கருணாநிதிசெயல்பட்டு பிரச்னைகளை களைய வேண்டும்.
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.,ஆட்சியும்., மாநிலத்தில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியும் அமைய வேண்டும் என்பது தான் எங்களதுவிருப்பம். இதை ஆதரிக்கும் எந்தக் கட்சிக்கும் கூட்டணியில் இடம் உண்டு. தமிழக சட்டசபையில் ஒற்றை இலக்க இடம் உள்ள பா.ஜ.,அடுத்து வரும்தேர்தலில் இரட்டை இலக்க இடங்களைப் பிடிக்கும்.
பா.ஜ.,விற்கு 60 தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.,தலைமையிலான தனிக் கட்சி ஆட்சி உருவாக வேண்டும். எங்களுக்குவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு கேட்போம். வேறு தொகுதிகளைக் கொடுத்தால் ஏற்க மாட்டோம்.
நெடுமாறன் தலைமையிலான தமிழ் தேசிய இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு அமைப்புகள் தடை செய்ய வேண்டும்.
பிரிவினைவாத சக்திகளை எப்போதும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ராஜ்குமாரை மீட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக பிரிவினைவாதத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார் நெடுமாறன். பிரிவினைவாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.