நிதி நிறுவன வழக்கு .. ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்
சென்னை:
சென்னை ஆர்.பி.எஸ். பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்திற்கு, வட்டி விகிதம் வழங்குவதில்விதிவிலக்கு அளித்தது தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ்வங்கிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் விதித்த உத்தரவில், டிசம்பர் 20-ம்தேதிக்குள், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், விதி விலக்குஅளித்ததற்கு முன்பு அதுகுறித்து எப்படி ரிசர்வ் வங்கி திருப்தியடைந்தது என்றவிவரங்களையும் வழங்குமாறு கேட்டுள்ளார்.
முன்னதாக, இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில், 1998-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில்,முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை நாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றுவிலக்கு அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விதி விலக்கு தொடர்பாக முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications