முன்விரோதம்: த.மா.கா தலைவர் படுகொலை
நாகர்கோயில்:
பள்ளிக்கூடம் நடத்தவதில் ஏறப்பட்ட சண்டை காரணமாக த.மா.கா. பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்டார்.
கன்னியாகுமரி தேவானை தாலுகாவில் இருக்கம் சகாயநகர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் தமிழ் மாநில காங்கிரஸ் கடசியைச் சேர்ந்த அகிமாஸ்என்பவர். இவர் ரஜினி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார்.
அகிமாசுக்கும் மற்றொரு கும்பவலுக்கும் இடையே பள்ளிக்கூடம் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சகாயநகருக்கு அருகே இருக்கும் லாயம் விலக்கு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அகிமாஸ் மீது ஒரு மர்மகும்பல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
ஆபத்தை அறிந்த அகிமாஸ் தப்பி ஓடத் துவங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்தி கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு ஓடி விட்டது.ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
இதே சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த கொலை தொடர்பாக ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications