விளையாட்டில் அரசியல் தலையீடு .. மல்லேஸ்வரி புகார்
போபால்:
விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது எனஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கித் தந்த பளுத் தூக்கும் வீராங்கனைமல்லேஸ்வரி குறை கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் மல்லேஸ்வரி கூறுகையில், இந்திய விளையாட்டுத்துறையில் அரசியல் பலமாக வேரூன்றி விட்டது. இது விளையாட்டுத் துறையின்வளர்ச்சிக்கு நல்லதல்ல.
இது விளையாட்டிற்கும். விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்,வெற்றிகளையும் பாதிக்கும்.
இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பைஏற்படுத்துவதும், பெரிதும் தடையாக இருப்பது பயிற்சியாளர்களும்.அதிகாரிகளும்தான். நான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டதேஅதிர்ஷ்டத்தால்தான்.
என்னை ஒலிம்பிக்கில் விளையாடாமல் தடுப்பதற்காக எனது பயிற்சியாளர் சாந்து பலகுற்றச்சாட்டுகளை சுமத்தினார். பளுதூக்கும் கூட்டமைப்பு என்னை சிட்னிக்குஅனுப்புவதை தடுக்கும் எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டது. எனக்கு பதிலாகசங்கமாச்சா ஜானுவை அனுப்ப முயற்சிகள் மேற் கொள்ளளப்பட்டன என கூறினார்.












Click it and Unblock the Notifications