For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலில் யானை, பிறகு சிறுத்தை .. வால்பாறை பரிதாபம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வால்பாறையில் பால் வியாபாரியை மிதித்துக் கொன்றது யானை. இறந்த அவரது உடலை சிறுத்தைகள் கடித்து குதறியது.

இந்தக் கோர சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

வால்பாறை மலை மேற்குத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த மலைப்பகுதியில் உள்ள உருளிக்கல்எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

டிசம்பர் 18ம் தேதி இரவு 8.30 மணியளவில் பால் வியாபாரம் செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுஅவரை யானை ஒன்று வழி மறித்தது. யானையிடம் மாட்டிக் கொண்ட சந்திரன் வேகமாகத் தப்பி ஓடியுள்ளார். அப்போது காட்டுயானை தனது துதிக்கையால் வளைத்துப் பிடித்து காலல் மிதித்துக் கொன்றது. பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தவழியாக வந்த சிறுத்தைகள் அவர து உடலைக் கடித்துக் குதறியுள்ளன.

காலையில் பாதை வழியாக நடந்த சென்ற சிலர் அரையும் குறையுமாகக் கிடந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அவரது உறவினர்கள் சந்திரனின் சிதைந்த உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மலைவாழ் மக்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரி எம்.எல்.ஏ. சிங்காரவேலுவிடம்கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X