மாணவர்களை தெய்வமாக பாருங்கள் .. அன்பழகன்
ஈரோடு:
குழந்தையும் தெய்வமும் ஒன்றே எனக் கருதி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் எனதமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
ஈரோடு அருகே நடந்த பள்ளிக்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர்அன்பழகன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நவீன யுகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, கம்ப்யூட்டர் கல்வி அவசியம் என்பதை அரசுநிறைவேற்றி வருகிறது. இனி வரும் காலங்களில் கம்ப்யூட்டரி உபயோகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.எனவே தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் கல்விஅளிக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களது சீரிய அறிவைவளர்க்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்,குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்ற கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
சமுதாயத்தில் ஒழுக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடையவர்களால் தான்சமுதாயத்தைக் காப்பற்ற முடியும். சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பதால் தான் வன்முறைஏற்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியை விட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வி அளிக்கவேண்டும்.
ஒழுக்கமில்லாதவர்களிடம் இருக்கும் கல்வி எந்த விதத்திலும் வாழ்க்கைக்குப் பயன்படாது. குடும்ப நலன்களைவிட சமுதாயத்தின் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications