For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.க பெண் எம்.எல்.ஏ மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தாராபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சரஸ்வதி ஆதி திராவிடர் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாராபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தாராபுரம் சட்டசபைத் தொகுதி தனித்தொகுதி. இதில் ஆதிராவிடர் இனத்தவர் மட்டுமே போட்டியிட முடியும். இந்த தொகுதியில் தி.மு.க சார்பில் சரஸ்வதிபோட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு ஆவணங்களை ஆராயும் பொழுது அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று தெரிகிறது.

நெஞ்சம்பாளையம் தொடக்க கூட்டுறவு விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக இருந்திருக்கிறார். இங்கு கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்த்ததில்,இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றே தெரிகிறது.

ஆனால் இவர் சரசு என்ற பெயரில் பெண்கள் பள்ளியில் ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் வாங்கியுள்ளார். தாசில்தாரையும் வற்புறுத்தியுள்ளார். போலிஆவணங்கள் மூலம் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்மனோகரன் கூறியுள்ளார்.

நீதிபதி அக்பர் பாஷா காதிரி இந்த மனுவை விசாரித்து இரண்டு வாரத்தில் பதில் தருமாறு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்திரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X