அஞ்சல் வழிக் கல்வி .. விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி மூலம் கல்வி கற்க விரும்புபவர்கள் வரும் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை மற்றும் இளநிலை பாடத்தில் சேர விரும்புபவர்கள் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் எம்.சி.ஏ. மற்றும் டிப்ளமோ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் வெளியிடப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் எம்ஏ, எம்காம், எம்சிஎஸ் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அபராதம் இன்றி செலுத்த கடைசி தேதி வரும் 22 ம் தேதி. அபராதத்துடன் வரும் ஜனவரி 31 ம் தேதிக்குள்சமர்ப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications