தியாகிகளை மறந்து விட்டது காங் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை காங்கிரஸார் மறந்து விட்டனர் என்று ஆர்.எம்.வீரப்பன் பேசினார். தமிழகசவரத் தொழிலாளர் மருத்துவர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் மறைந்த தியாகி எஸ்.எஸ்.விசுவநாததாஸ் படத்திறப்பு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் கழக நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்குகால்கோல் இட்டவர்கள் சவரத் தொழிலாளர்கள்.
சென்னையில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் போதே உயிரை விட்ட விசுவநாத தாஸின் திருவுருப்படத்தைஒவ்வொரு முடி திருத்துவோரும் தனது கடையில் வைக்கவேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும்மரியாதையாகும்.
நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் பலர் அறியப்படாமலேயே உள்ளனர். விசுவநாததாஸ்போன்றவர்களை காங்கிரஸ் காரர்களே மறந்து விட்டனர் என்றார் வீரப்பன்.
விழாவில் பேசிய சமூகநலத்துறை அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் கூறுகையில் சுதந்திரம் அடைந்து ஐம்பதுஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் முன்னேற்றப் பாதையில் நாடு பாதியளவு கூட செல்லவில்லை.
இது நாட்டின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. தியாகி விசுவநாத தாஸ் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைநாம் மறந்துவிட முடியாது என்றார். விழாவில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவர் எஸ்.கணபதி வாழ்த்துரைவழங்கினார்.












Click it and Unblock the Notifications