நீலகிரி மலையில் வீரப்பன்?

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

நீலகிரி மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் தங்கியிருந்ததற்கான அடையாளங்களைப் போலீசார் கண்டு பிடித்தனர்.இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வீரப்பன் எங்கு எப்படி உள்ளான் என்பதற்கான நம்பகமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.அதிரடிப்படையினருக்கு உதவியாக 50 வனத் துறை வீரர்கள், மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்செயல்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அடிக்கடி இடத்தை மாற்றி வரும் வீரப்பன் குறித்த தகவல்கள்கிடைக்கவில்லை.

இந்நிலையில் வீரப்பன் கும்பல் நீலகிரி மலைப் பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார்,சின்னக்குன்னூர், மங்களாபட்டி, தெங்குமரஹாடா, ஆனைகட்டி போன்ற இடங்களில் தீவிர சோதனைமேற்கொண்டனர்.

அப்போது சிறியூர் பள்ளத்தாக்குப் பகுதியில் புகை வெளியாவதற்கான அடையாளங்களை பைனாகுலரின்உதவியால் கண்டறிந்தனர்.

புகை வந்த இடத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அங்கு சமையல்செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன.

இங்கு வீரப்பன் ஆட்கள் சமையலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தினர். இதன் அடிப்படையில்மாயார் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிர வேட்டையைத் துவக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+