சபரிமலை பிரசாதத்தில் எலி, கழுதை முடிகள்
சபரிமலை:
சபரி மலைக் கோயில் பிரசாதத்தில் எலி வால் கிடந்ததாக கிளம்பிய சர்ச்சையைத் தொடர்ந்து இப்போது புதுப்பிரச்னை ஒன்று துவங்கியுள்ளது. இந்த பிரசாதத்தில் எலிமுடி, கழுதை முடி, மனித தலை முடிகள் இருப்பதாகஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சபரிமலையில் ஐயப்பன் திருக்கோயில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அரவணைப் பிரசாதம்புகழ் பெற்றதாகும்.
இந்த பிரசாதத்தில் எலி வால் கிடந்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேரளஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரசாதத்தை ஆராய்ந்துஅறிக்கை சமர்ப்பிக்குமாறு திருவனந்தபுரத்தில் உள்ள தடய அறிவியல் கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தடய அறிவியில் நிபுணர் பரமேஸ்வரன் சபரிமலை சென்று பிரசாதத்தை ஆய்வு செய்தார். இந்தஆய்வில் பிரசாதத்தில் எலி வால் இல்லை என அறிக்கை கொடுத்தார்.
ஆனால், அவற்றில் கழுதை முடி, மனித தலை முடி, எலி முடி ஆகியவை இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தார்.இதையடுத்து இது குறித்து ஆராய்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கவும், ஒரு மாத காலத்தில் இது பற்றிய விரிவானஅறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications