For Daily Alerts
Just In
"சாராயப் படுகொலைக்கு அரசே காரணம்
சென்னை:
சாராய படுகொலைக்கு அரசே காரணம் என்று மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பீமன் தோப்பைச் சேர்ந்த இந்திரா, ரத்தினம் இருவரும் கடந்த ஆறாம் தேதி சாராய வியாபாரிகளால் அடித்துக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது.
கடந்த மூன்று தேர்தல்களின் போதும் கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்தேன்.ஆனால் கட்சிகளோ வருமானத்திற்கு ஆசைப்பட்டு செயல்படுத்தவில்லை. சமுதாயச் சீரழிவுக்கு அரசே காரணமாவதுதான் வேதனையைத் தருகிறதுஎன்றார்.
Story first published: Wednesday, December 20, 2000, 5:30 [IST]