For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவள்ளூர் வங்கியில் கொள்ளை முயற்சி
திருவள்ளூர்:
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூவாலம்பேட்டிலுள்ள இந்தியன் வங்கி கிளை கும்பல் ஒன்று பணத்தைக்கொள்ளையடிக்க முயன்றது.
வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அக்கும்பல் வங்கியின் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்தது. பணம் வைக்கப்பட்டிருந்த அறையில் அக்கும்பல் நுழைந்ததும் அபாய மணி ஓசை எழுப்பியது.இதையடுத்து அக்கும்பல் தப்பியோடி விட்டது.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸார் விரைந்துள்ளனர். கொள்ளைக் கும்பல் குறித்து புலன்விசாரணை நடந்துவருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, May 21, 2000, 5:30 [IST]