ஆந்திரா செல்கிறார் ஸ்டாலின்
சென்னை:
கிருஷ்ணா குடிநீர் திட்டம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுவதற்காக சென்னை மேயர் ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்.
அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் செல்லவுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தவறி விட்டது.அதனால் சென்னையில் அடுத்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.
இதனால் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரைக் கொஞ்சம் அதிகமாக தந்தால் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனை ஏற்படாது. அதனால் ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மேயர் ஸ்டாலினும் விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளனர். எப்போது ஹைதராபாத் செல்வார்கள்என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications