கேரள கோவிலில் ரஜினி மனைவிக்குப் பாதபூஜை
சென்னை:
நடிகர் ரஜினி காந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்திற்கு கேரள மாநிலம் திருவல்லா கோவிலில் பாத பூஜை செய்யப்படவுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே திருவல்லாவில் உள்ளது சக்குளத்துக் காவு என்ற பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் பொங்கலிடுவதுமுக்கிய அம்சமாகும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஒரே சமயத்தில் பொங்கல் வைப்பார்கள்.
இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை பொதுச் சேவையில் பிரபலமான ஒரு பெண்மணியைத் தேர்வு செய்து முதல் மரியாதை செய்யப்படும். அவர்களுக்குப் பாதபூஜையும் செய்யப்படும். இந்த வருடம் பாத பூஜை நடத்துவதற்கு லதா ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்திலுள்ள அனைத்துக் கேரள தமிழ் பேரவையினர் கலந்து கொண்டு தமிழக பெண்மணியை இந்த தடவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டனர். இதையடுத்து நிர்வாகம் பொதுச் சேவையில் பிரபலமான லதா ரஜினிகாந்தை தேர்ந்தெடுத்தது.
லதா ரஜினிகாந்துக்குப் பாதபூஜையும், முதல் மரியாதையும் நடத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதற்காக லதா ரஜினிகாந்த், அவரதுமகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் சக்குளத்து காவு பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்கிறார்கள்.
லதா ரஜினிகாந்த்துக்குப் பாத பூஜை நடந்ததும் அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் அத்தனைப் பெண்களுக்கும் பாத பூஜை நடக்கும். பாத பூஜைநிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications