பஞ்சு லாரியை கடத்தி விற்றவர்கள் கைது
கோவை:
ஆந்திராவில் இருந்து வந்த பஞ்சு லாரியைக் கடத்திச் சென்று பாதி விலையில் விற்பனை செய்தவர்களைப்போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் வாரங்கல்லிருந்து ஒரு லாரியில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பஞ்சு திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த பஞ்சு பேல்கள் கடந்த 6ம் தேதியே வந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட தேதியில்அந்த கம்பெனிக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
பஞ்சு பேல்களை ஏற்றி வந்த லாரியை திருப்பூர் பெரியார் காலனி என்ற இடத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்தசீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் மடக்கி கடத்திச் சென்றுள்ளனர். அவிநாசியில் உள்ள கைகாட்டிப் புதூர் என்றஇடத்தில் இறக்கியுள்ளனர்.
பின்னர் மில் அதிபர் ஒருவருக்கு பாதி விலையில் விற்பனை செய்தனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுசென்னை சென்று உல்லாசமாக வாழ்க்கை நடத்த தொடங்கினர்.
இதையடுத்து பஞ்சு கிடைக்காத மில் அதிபரின் புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார்இருவரையும் சென்னையில் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.












Click it and Unblock the Notifications