அசாருதீனின் அர்ஜூனா விருது பறிபோகிறது
டெல்லி:
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களிடமிருந்து அவர்களுக்குகொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதுகளை திரும்பப் பெறுவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
சி.பி.ஐ.யால் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட்வீரர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ.இயக்குனர் மாதவனை நியமித்தது. அவரும் சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை நிரூபணம்செய்தார்.
அதனால் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசாருதீனுக்கும், அஜய் சர்மாவுக்கும்வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனவும், மனோஜ் பிரபாகர்,அஜய் ஜடேஜா ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடக்கூடாதுஎனவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து.
தற்போது மத்திய அரசு கிரிக்கெட் சூதாட்டத்தில் தண்டிக்கப்பட்ட மூன்று கிரிக்கெட்வீரர்களை அவர்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட அர்ஜூனா விருதை திரும்பஅளிக்குமாறு கேட்க முடிவு செய்துள்ளது.
அசாருதீனுக்கு 1986-ம் ஆண்டும், மனோஜ் பிரபாகருக்கு 1983-ம் ஆண்டும்அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அஜய் ஜடேஜாவின் சேவையை பாராட்டிஅவருக்கு ஜனாதிபதியால் ஆண்டு விழா ஒன்றில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் சிவசேனா உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியதாவது:
அசாருதீன். மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா ஆகியோரிடமிருந்து அவர்களுக்குகொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம் அவர்கள் ஏதாவது கூற விரும்பினால், அவர்களுக்கு 15 நாட்கள் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனாலும் அமைச்சர் எப்போது அவர்களுக்கு இது குறித்து ஆணை அனுப்பப்படும்என தெரிவிக்கவில்லை.
இந்த மூன்று விளையாட்டு வீரர்களும் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.குறிப்பாக ஜடேஜா தன் மீதுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்ற உதவியைநாடப்போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications