முதல்வர் கருணாநிதிக்கு முதுகுவலி
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு வியாழக்கிழமை முதுகுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
முதல்வர் கருணாநிதிக்கு வியாழக்கிழமை காலை திடீரென்று முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
முதல்வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறும், தென்மாவட்ட சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து ஓய்வு எடுக்கும்படியும மருத்துவர்கள்கூறினார்களாம். ஆனால் அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்குச் செல்லும் போது அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், மேயர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமிஆகியோர் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications