மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த 17 பேர் கும்பல் கைது
டெல்லி:
டெல்லி தொழிலதிபர்களிடம் பணம் பறித்தல் போன்ற குற்றங்களைச் செய்து வந்தமத்திய கிழக்கு பகுதி நாட்டைச் சேர்ந்த 17 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
பசல் உர் ரஹ்மான் என்பவர் தலைமையில் இந்தக் குழுவினர் இயங்கி வந்தனர். இந்த17 பேரும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர்களை மிரட்டி அவர்களிடம் பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில், டெல்லி தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றபோது பசல் உர்ரஹ்மான் சிக்கினார். இதையடுத்து இவர்களது செயல்பாடுகள் தெரிய வந்தது.
டெல்லி போலீஸ் துணை கமிஷனர் அசோக் சந்த் இதுகுறித்துக் கூறுகையில், இந்தக்குழுவினர் கடந்த சில மாதங்களாகவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம்இதுவ 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர், லிஸோ ஜான்,வினோத் வீரு கோடா, விவேக் ஆசாத், பல்தேவ் சிங் நேகி என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.