"பாக். அமைதித் தீர்வுக்கு முயன்றால் வரவேற்போம்
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீடித்து வரும் பதட்டத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் வரவேற்கத் தயார் என்று இந்தியாகூறியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் பதட்டம் இருந்துவருகிறது. இதைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள இந்தியா தயாராகஇருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் 7 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை சண்டை நிறுத்தம் செய்ய இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றது.
இந்தியாவுக்கு தீவிரவாதிகளிடம்ருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ஒடுக்குவதேமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாகும். மேலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதட்டத்தைத் தணிக்க பாகிஸ்தானின் எந்தத் திட்டத்திற்கும்இந்தியா தயாராக உள்ளது என்றார்.
பாக். கருத்து:
இதற்கிடையே பாகிஸ்தான் கருத்துத் தெரிவிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் போதுமான அளவு தனது ராணுவ வீரர்களை வாபஸ்வாங்கியுள்ளது என்ற அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் ஜனவரி மாதம் 26 ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர்வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் ரம்ஜான் மாதத்தையொட்டி பிரதமர் வாஜ்பாய் சண்டை நிறுத்தம் அறிவித்ததையடுத்து, பாகிஸ்தான் முடிந்த அளவு துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் என்றும் அறிவித்தது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications