அகதிகள் முகாமில் புலிகள் ஏஜென்ட் கைது
ராமேசுவரம்:
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் முகாமில்இருந்த விடுதலைப்புலிகளின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் போரின் காரணமாகபல அகதிகள் தமிழகத்திற்குவருகிறார்கள். அவர்கள் பல அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,மண்டபம் முகாமில் இருக்கும் அகதிகள் முகாமில் விடுதலைப் புலிகள் ஏஜென்ட்தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில்போராளிகள் யாரும் ஊடுறுவிவிடாமல் இருக்க நீண்ட விசாரணைக்கு பின்ளரேஅகதிகள் முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இவர்களை க்யூ பிராஞ்ச் போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். இந் நிலையில்அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிவகணபதி (40) என்பவர் மேல் சந்தேகப்பட்டுஅவர் கண்காணிக்கப்பட்டார்.
அவர் விடுதலைப் புலிகளின் ஏஜென்டாக செயல்படுவது தெரியவந்தது. அவர்விசாரணை செய்யப்பட்டபோது அவர் பல பொருட்களை இலங்கைக்கு கடத்திஉள்ளதும், பல முறை அவர் இலங்கைக்கு தப்பி சென்று வந்ததும் தெரிய வந்தது.
இவர் தற்போது கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என கூறினர்.












Click it and Unblock the Notifications