த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் த.மா.கா. கட்சியிலிருந்து பிரிந்த 3 பேரின் பதவியை பறிப்பது தொடர்பான நோட்டீசுக்கு பதிலளிக்க, மேலும் 15 நாட்கள் அவகாசம்தருமாறு 3 பேரும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏழுமலை, ராஜசேகர் மற்றும் மனோகர் ஆகியோர் பிரிந்தனர். அவர்கள் தங்களை தனி அணியாகஅறிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுஅமைச்சர்கள் தேனி.ஜெயக்குமார் மற்றும் கந்தசாமி ஆகியோரும் சபாநாயகரிடம் மனுக் கொடுத்தனர்.
இந்த மனு தொடர்பாக சபாநாயகர் விசாரித்தார். பின்னர் அவர் கூறுகையில், அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று 3 எம்.எல்.ஏ.க்களுக்கும்நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீசை பெற்றுக் கொண்ட மனோகர் அணியினர், இந்த மனு மீதான தங்கள் பதிலைத் தெரிவிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் கூறிய சபாநாயகர் சுப்ரமணியம் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். அதற்குள்மனோகரன் அணியினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications