வெற்றி நடை போடும் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்:
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை நோக்கிவெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்து வரும் உலக சாம்பியன் போட்டியில், ஸ்பெயின்வீரர் அலெக்ஸி ஷிரோவுடன், ஆனந்த் மோதி வருகிறார்.
இதுவரை நடந்த மூன்று சுற்றுப் போட்டிகளில் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அடுத்தஇரண்டு சுற்றுக்களிலும் ஆனந்த் வென்றுள்ளார். இதையடுத்து 2.5-0.5 என்ற புள்ளிகள்கணக்கில் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 6 சுற்றுக்கள் உள்ளன. ஆனந்த் போகும் போக்கைப்பார்த்தால், நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. அப்படி நடந்தால்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு செஸ் வீரர், உலக சாம்பியன் பட்டத்தைப் பெறுவது இதுவேமுதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications