மணம் முடித்தார் மடோனா
லண்டன்:
இங்கிலாந்து திரைப்பட இயக்குநர் கய் ரிச்சியும், அமெரிக்க பாப் இசைப் பாடகிமடோன்னாவும், ஸ்காட்லாந்தில் வெளிக்கிழமை மாலை நடந்தது.
மிகக் குறைந்த அளவிலான விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிக்குஅழைக்கப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர்களும் கூட திருமண நிகழ்ச்சிக்குஅழைக்கப்படவில்லை.
திருமணம் எந்த முறையில் நடந்தது என்பதுதான் தற்போது பத்திரிகையாளர்கள் மனதில்உழன்று கொண்டுள்ள கேள்வி. கிறிஸ்தவ முறைப்படியா, அல்லது மடோனா தற்போதுமோகம் கொண்டுள்ள புத்த முறைப்படியா நடந்தது திருமணம் என்று லண்டனிலிருந்துவெளியாகும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த விருந்தினர்கள், மடோனாவுக்குகெளரவம் தரும் வகையில் திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்துக் கருத்துக் கூறமறுத்து விட்டனர். அதேபோல, வீட்டில் வேலை பார்ப்பவர்களும், தங்களது வேலைபறிபோய்விடுமோ என்ற அச்சத்தால், அதுகுறித்து மூச்சு விட மறுத்து விட்டார்கள்.
திருமண நிகழ்ச்சிக்குப் பின் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியில் மடோனா ஈடுபட்டதாகடைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு ஸ்காட்லாந்திலுள்ள இன்வர்னஸ் என்ற இடத்தில், ஸ்கிபோ அரண்மனையில்திருமணம் நடந்தது. ஒரு நாள் நிகழ்ச்சிக்காக இந்த பழைய அரண்மனைஅலங்கரிக்கப்பட்டிருந்தது.
கடந்த 1985-ம் ஆண்டு முதல் முறையாக திருமணம் செய்து கொண்டபோது, திருமணம்நடந்த இடத்தைச் சுற்றி, பத்திரிகையாளர்கள் ஹெலிகாப்டரில் பறந்து புகைப்படம்எடுத்தனர். இதனால் திருமண உறுதி மொழி கூறும் நிகழ்ச்சியின்போது, தான் என்னசொல்கிறோம் என்பதே மடோனாவுக்குப் புரியவில்லை. இம்முறை அப்படி எதுவும்நடக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.