மாறுவேடத்தில் வீரப்பன்?
ஈரோடு:
அதிரடிப்படை வீரர்களின் கண்களிலிருந்து தப்புவதற்காக மொட்டையடித்து, மீசையை எடுத்து விட்டு,மாறுவேடத்தில் வீரப்பன் சுற்றுவதாக கூறப்படுகிறது.
நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட கையோடு, வீரப்பனைப் பிடிக்க தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் தீவிரமாக இறங்கிவிட்டன. அதிரடிப்படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
புதிதாக எல்லைப் பாதுகாப்புப் படையும், அதிரடிப்படை வீரர்களுக்குத் துணையாக வந்தது. இதையடுத்து வீரப்பன்கர்நாடக, தமிழக காட்டுப் பகுதியிலிருந்து கேரள காட்டுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் கேரள காட்டுப் பகுதி எல்லையில், ஒரு ஆதிவாசி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார். இவரை வீரப்பன் குழுவினர்தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால்அதிரடிப்படை வீரர்கள்தான் இவரை சுட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வீரப்பன், முறுக்கு மீசையுடன் இல்லாமல், மீசையை சுத்தமாக ஷேவ் செய்து விட்டு,மொட்டைத் தலையுடன், மாறு வேடத்தில் உலவுவதாக அதிரடிப்படை போலீஸார் கருதுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஆனைக் கட்டி மலைப் பகுதி வழியாக அவர் கேரளாவுக்குள் தப்பியிருக்கலாம் என்றும்கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதி செக்போஸ்ட்டில் போலீஸால் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மொட்டைத் தலையுடன் யார் வந்தாலும் அவர்களைத் தீவிரமாக பார்த்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் அதிரடிப்படை வீரர்களுக்குத் தேவையான கம்பளிப்போர்வைகள், ஸ்வட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications