வீரப்பனைப் பிடிப்பது எளிது: கார்த்திக்கேயன்
கோவை:
வீரப்பனைப் பிடிப்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல, அதிரடிப்படையின் அணுகுமுறை சரியாக இருந்தால், இம்முறை வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதுஎன முன்னாள் சி.பி. ஐ இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் சி.பி.ஐ.,இயக்குநரும், முன்னாள் மனித உரிமை கமிஷனின் தலைவருமான கார்த்திகேயன் பேசியதாவது;
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது சமுதாயத்தில் குற்றங்களைத் தூண்டி விடுவதற்குச் சமமாகும். எனவே, வீரப்பனுக்கு உரிய தண்டனைகிடைக்க வேண்டும். மகாயுத்தம் என்ற தலைப்பில் ஸ்டார் டி.வி.,யில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரப்பனைப் பிடிக்காமல் விட்டது எந்த மாநிலத்திற்குஏற்பட்ட தோல்வி என ஒரு கேள்வி கேட்டனர். கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு மட்டும் ஏற்பட்ட தோல்வியல்ல. இந்தியாவிற்கேஏற்பட்ட தோல்வி என பதில் கூறினேன்.
வீரப்பனைப் பிடிக்க முடியாமல் போனதற்கு 3 காரணங்களை விளக்கினேன்.
முதலாவதாக அதிரடிப்படையினருக்கு பொதுமக்கள் உதவி கிடைக்காமல் போனது. இரண்டவாது வீரப்பனுக்குப் பாதுகாப்பாக உள்ள காடு, 3மாநிலங்களுக்கும் பொதுவான பரப்பாகும். இதனால் ஏற்பட்ட எல்லை பிரச்னை.
3வது காரணம், அதிரடிப்படையை வழிநடத்திச் செல்லும் அதிகாரிகளின் திறமையின்மை. கடத்தப்படும்போது மட்டுமே இவர்கள், பரபரப்பு சுறுசுறுப்புடன்செயல்படுகின்றனர். பிற நேரங்களைப் பயன்படுத்தத் தவறி விட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தலின்போது ஒவ்வொரு முறையும் ஆதிவாசி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளான். இதனால்,அவனுக்கு அந்த மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இத்தகைய ஆதரவால், போலீசாரின் நடமாட்டம் குறித்த தகவல்கள் எளிதான அவனைச்சென்றடைகிறது.
வீரப்பனைக் காட்டிக் கொடுக்கவோ, போலீசுக்குத் தகவல் சொல்வதாகவோ தெரிய வந்தால் அவர்களை அதே இடத்தில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறான். இதனால் ஏற்பட்ட பய உணர்வால் மக்கள் யாரும் காட்டிக் கொடுப்பதில்லை.
ஆதிவாசிகள்:
அதிரடிப்படையினரின் கடுமையான அணுகுறை ஆதிவாசி கிராம மக்களின் மனதை மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. இதனால் முற்றிலுமாகஅதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் போய் விடுகிறது. அதிரடிப்படையினரின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இந்த மாற்றம் இப்போதுஏற்பட்டுள்ளது. ஆதிவாசி கிராம மக்களின் ஒத்துழைப்பை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இப்போது அவர்களுக்கு வெற்றிகிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 97ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஒருவரை அவர்கள் கடத்திச் சென்றபோது, நான் டி.ஜி.பி.,யாகப் பணியாற்றினேன். அப்போதைய பிரதமர் என்னிடம்வீரப்பனைப் பிடிக்க முடியுமா எனக் கேட்டார். முடியாத காரியம் எதுவும் இல்லை, முயற்சியும் சிரமம் அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.
பத்திரிக்கைகள் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படிையினர் மேற்கொள்ளும் தேடுதல் அணுகுமுறைகளைப் பிரசுரிக்கத் தேவையில்லை. இதனால் தேடுதல்வேட்டையில் தொய்வு ஏற்படாலம். வீரப்பனுக்கு தகவல்கள் உடனடியாகக் கிடைக்க இது வாய்ப்பாக அமையும் என்றார் கார்த்திக்கேயன்.