27-ல் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம் (திருச்சி):
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் 21 நாள் வைகுண்டஏகாதசி திருவிழா டிசம்பர் 27-ம் தேதி துவங்கி ஜனவரி 16-ம் தேதி வரை நடக்கிறது.
மாநில இந்து அறநிலையத் துறை இணை கமிஷனரும், கோவிலின் செயல்அதிகாரியுமான முத்துச்சாமி கூறுகையில், பகல்பத்து ஊர்வலம் டிசம்பர் 27-ம் தேதிமுதல் ஜனவரி 5-ம் தேதி நடைபெறும்.
இராப்பத்து ஊர்வலம் ஜனவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறும்.
ஜனவரி 5-ம் தேதி மோகினி அலங்காரம் இடம்பெறும். அதற்கு அடுத்த நாள்வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறும். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள்நடந்துவருகின்றன என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications