ஸ்டாலினின் பயணச் சிறகுகள் ..
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலின் எழுதிய பயணச் சிறகுகள் என்ற புத்தகத்தை கல்வி அமைச்சர் அன்பழகன் சனிக்கிழமை வெளியிட்டார்.
தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மையமாக வைத்து மேயர் ஸ்டாலின் பயணச்சிறகுகள் என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் அன்பழகன் நூலை வெளியிட்டார். புத்தகத்தைகவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
மேயர் ஸ்டாலின் அடுத்த தலைமுறையினரைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்படுகிறார். அவர் எழுதிய நூல் நாமே ஒரு பயணத்தை மேற்கொள்வதுபோலவும், நேரடியாகக் காட்சிகளைக் காண்பது போலவும் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்
.முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேசுகையில், அமெரிக்காவுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன் கவிஞர் வைரமுத்துஎன்னை வாழ்த்தினார். அப்போது என்னிடம் குறிப்பேடு ஒன்றைக் கொடுத்தார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்தவுடன்,சுற்றுப்பயணம் குறித்து பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பயணச்சிறகுகள் என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளன் என்ற எண்ணத்திலோ, எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆர்வத்திலோ எழுதவில்லை. நான்பார்த்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதினேன் என்றார் ஸ்டாலின்.
விழாவில், நடிகர் பார்த்திபன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சாவி, கவிஞர் எக்ஸ்னோரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications