ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மற்றும் ஆங்கிலம் மூலம் கம்ப்யூட்டர் கல்வி ஆகியவை மிகவும் முக்கியமானது. ஆங்கில வழியில் கல்விகற்றால்தான் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மதுரையில் திங்கள்கிழமைதெரிவித்தார்.

மதுரையில் கணிணி தமிழ் சங்கத்தின் சார்பில், புதிய தமிழ் தளத்தைத் திறந்து வைத்தும், சி.டி. யை வெளியிட்டும் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 33 வருடங்களாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மாணவர்கள் வட இந்தியாவில் வேலைகிடைக்காமல் தவிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. ஏனெனில் வட இந்தியாவில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுதமிழகத்திலுள்ளவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் எதுவும் தெரியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கம்ப்யூட்டர் கல்வியையும் அவர்கள் ஆங்கில வழியில் கற்பதால்இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

ஆங்கில அறிவு இல்லாத கிராமப்புற மாணவர்கள், கம்ப்யூட்டர் கல்வி தமிழ் மூலம் கற்பிக்கப்படுவதால் மிகவும் பயன்பெறுவார்கள் என்றார்.

முதல்வர் கருணாநிதியின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், இந்தியாவில் கம்ப்யூட்டர் கற்றவர்களுக்கு 22லட்சத்திற்கு மேல் வேலைவாய்ப்புக்கள் உள்ளன. அவற்றில் 70 சதவீத வேலைவாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளன என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+