சென்னை விபத்தில் 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகாபலிபுரத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய மாருதி வேனும், அரசு பஸ்சும்நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 4 பேர் அந்தஇடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை பல்லாவரத்தில் வசித்து வரும் ரஞ்சித் சிங் என்பவரது மகள் சைலா (19).சேத்துப்பட்டைச் சேர்ந்த அன்பழகன் (28), அவருடைய மனைவி இன்பஒளி (26),மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜோசி (24), சீனிவாசன், ஜனார்த்தனன் ஆகிய 8 பேரும்அவர்கள் பணிபுரியும் இடங்களில் நண்பர்களாக இருந்தவர்கள்.

இவர்களை மகாபலிபுரத்தில் வசிக்கும் நண்பர் கிறிஸ்துமஸ் விருந்திற்குஅழைத்திருந்தார். இந்த விருந்திற்கு 8 பேரும் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தனர்.

விருந்திற்கு பின் மகாபலிபுரத்தை சுற்றி பார்த்து விட்டு சென்னை திரும்ப வேனில்கிளம்பினர். வேளச்சேரியைச் சேர்ந்த சங்கர் (28) என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

வேன் கோவளத்தைக் கடந்து சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது.முட்டுக்காட்டுக்கும் கானத்தூருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது,சென்னையிலிருந்து கோவளத்திற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ் வேன் மீது மோதியதில் வேனில் பயணம் செய்த சைலா, இன்பஒளி, செல்விமற்றும் வேனின் டிரைவர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற5 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+