விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி:
செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகளால் மேலும் ஆபத்துக்கள் வரலாம் என்று அஞ்சப்படுவதால் இந்தியாவிலுள்ளஅனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
விமான நிலையத்திற்கு வருபவர்கள் நுழைவுச் சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மொத்தம் 124 விமான நிலையங்கள்உள்ளன. அவற்றில் மிகவும் பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள், பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள் மற்றும் லேசான பதட்டம்ஏற்படும் விமான நிலையங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்குத் தகுந்தவாறு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விமான நிலையத்திலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.