தமிழர்கள் படுகொலை.. 9 இலங்கை ராணுவ வீரர்கள் கைது
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணத்தில் 8 தமிழர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
சாவகச்சேரி அருகே மிரிசுவில் பகுதியில் 8 தமிழர்களின் சடலங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் இது தொடர்பாக 8 ராணுவவீரர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேவைப்பட்டால் கோர்ட்டுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
மிர்சுவில்லுக்கு பயணம் செய்து கொண்டிருந்த தமிழர்கள் 8 பேரை கடந்த டிசம்பர் 19 ம் தேதியிலிருந்து காணவில்லை என்று போலீஸில் அவர்களதுஉறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவர்களது சடலங்கள் மிர்சுவில்லில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பாயின்ட் பெடரோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications