செங்கோட்டை தாக்குதலுக்கு பாக்.காரணம்...பிரதமர்
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் வாஜ்பாய்குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோட்டயத்தில் பிரதமர் வாஜ்பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், செங்கோட்டைத் தாக்குதலுக்குபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஸ்கார் ஈ தொய்பா வைச் சேர்ந்த 2 பேர்தான் என்று டெல்லிபோலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் ஜனவரி 26 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த விதமாற்றமும் இல்லை. அதற்குப்பின் சண்டைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அல்லது மேலும்நீட்டிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் பிரதமர் வாஜ்பாய்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications