இலங்கையில் புயல்: 10,000 குடும்பங்கள் வெளியேற்றம்
கொழும்பு:
இலங்கையின் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்களில் திடீரென்று புயல் ஏற்பட்டதால் அங்கு வாழும் 10, 000 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் செவ்வாய்க்கிழமை 150 கிலோமீட்டர் வேகத்தில் கடும் புயல்வீசியது. வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை பகுதியில் புயல்காற்று வீசி வருகிறது. அங்கு படகுகள் அனைத்தும் கடலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் மழையும், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.வடகிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, திரிகோண மலை மற்றும் அம்பாரா நகரங்களிலிருந்து 10, 000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறுஇடங்களுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications