மதுரையில் விபத்து: 4 ஐயப்ப பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை புளியமரத்தின் மீது வேன் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர் அருகே உள்ள கோவை குளத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் கன்னியப்பன் வயது 40. இவர்தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 21 பேர் ஒரு வேனில் சபரிமலைக்குச் சென்றனர். சபரிமலை சென்று விட்டுசெவ்வாய்க்கிழமை காலை அவர்கள் அதே வேனில் கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த வேன் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி என்ற இடத்திற்கு வந்த பொழுது திடீரென்று நிலை தடுமாறிரோட்டில் தாறுமாறாக ஓடியது. வேன் அருகில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது. வேனில் இருந்த பத்து பேர்படுகாயமடைந்தனர்.

அவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயேகோவைகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மலையாளி வயது 13, ஜெகன்நாதன் வயது 22, மற்றும்வேன் டிரைவர் ஆகியோர் பரிதாபமாகச் இறந்தனர். கோவை குளத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மதுரை அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த தங்கராஜ், முருகானந்தம், மணிகண்டன், சதீஷ் உள்பட ஆறு பேர் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னொரு விபத்து:

அதே திருமங்கலம், டி.புதுப்பட்டியில் இன்னொரு விபத்து நடந்தது. சென்னை அசோக்நகரைச் சேர்ந்த 55 பேர்ஒரே பஸ்ஸில் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்த பஸ் புதுப்பட்டி வந்த பொழுது திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த பதினாறு பேர்படுகாயமடைந்தனர். ஐந்து பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 11 பேர் திருமங்கலம் அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+