For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓய்வுக்கு கேரளா செல்கிறார் வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வந்த பிரதமர் வாஜ்பாய், ஓய்வு எடுப்பதற்காக கேரளாவிலுள்ள குமாரகோமிற்கு ஒரு வார விடுமுறையில்டெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

தலைநகர் டெல்லியிலிருந்து முற்பகல் 11 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் வாஜ்பாய் கேரளா புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிலஅதிகாரிகளும் சென்றுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குமாரகோம் நகரில்தான் பிரதமர் ஓய்வெடுக்க உள்ளார். அவருக்குஅங்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. வேம்பானந்த் ஏரிக்கரைப் பகுதியில் அமைந்துள்ளது குமாரக்கோம். இந்த நகர் ஆயுர்வேதசிகிச்சைகளுக்குப் பெயர் பெற்ற இடமாகும்.

கடந்த அக்டோபர் மாதம் மூட்டு வலி அறுவை சிகிச்சை முடிந்த பின் பிரதமர் ஓய்வெடுக்கச் செல்வது இதுவே முதல்முறையாகும். கேரளாவில்வாஜ்பாய் பாரதிய ஜனதா தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஜனவரி 1 ம் தேதி தலைநகர் திரும்புவார். கேரளாவில் வேறு எந்தநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பிரதமர் ஒப்புக் கொள்ளவில்லை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X