இலங்கையை நிர்பந்திக்க இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை
கொழும்பு:
தாங்கள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் 24 ம் தேதி இரவு முதல் சண்டை நிறுத்தத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சண்டை நிறுத்தம்ஜனவரி மாதம் 24 ம் தேதி வரை அமலில் இருக்கும். புலிகள் தானாக எந்த தாக்குதலிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ராணுவ வீரர்கள்தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்தப்படும்.
பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட பின்புதான் சண்டைநிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எங்களின் சண்டைநிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியாஉள்பட சர்வதேச சமூகத்தினர் சண்டைநிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று புலிகள் தரப்பில் வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications